search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய கொடிகள்"

    • தமிழகத்தில் 20 லட்சம் தேசியக் கொடிகள் விற்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தபால் துறை மூலம் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
    • 6.5 லட்சம் தேசியக் கொடிகள் விற்க திட்டமிட்டு உள்ள நிலையில் 6 நாட்களில் மட்டும் இந்த அளவிற்கு விற்பனையாகி உள்ளது.

    சென்னை:

    நாட்டின் 76-வது சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைவரும் தங்கள் இல்லங்களில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

    இதனை தொடர்ந்து அனைத்து தபால் நிலையங்களிலும் தேசிய கொடி விற்பனை தொடங்கியது. கடந்த 7-ந் தேதியில் இருந்து சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து தபால் நிலையங்களிலும் தேசிய கொடி விற்பனை நடந்து வருகிறது.

    ஒரு கொடியின் விலை ரூ.25. நேரிலும், தபால் மூலமாகவும் பெறலாம். ஆன்லைன் வழியாக புக் செய்தால் வீட்டிற்கே தேசியக் கொடி வந்து சேரும். பொதுமக்கள் மட்டுமின்றி அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மொத்தமாக தேசிய கொடியை கேட்டாலும் நேரில் சென்று வழங்கவும் தபால் துறை தயாராக உள்ளது.

    தமிழகத்தில் 20 லட்சம் தேசியக் கொடிகள் விற்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தபால் துறை மூலம் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    சென்னை மண்டலத்தில் இதுவரையில் 80 ஆயிரம் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக அத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    6.5 லட்சம் தேசியக் கொடிகள் விற்க திட்டமிட்டு உள்ள நிலையில் 6 நாட்களில் மட்டும் இந்த அளவிற்கு விற்பனையாகி உள்ளது.

    இது குறித்து தபால்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பொதுமக்கள் தேசிய கொடியை வாங்க வேண்டும் என்பதற்காக நாளை (ஞாயிற்றுக்கிழமை)யும் தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை நடைபெறும்.

    தனிநபராகவோ, கூட்டமாகவோ, தொழில் நிறுவனமோ அல்லது ஒன்று, இரண்டு தேசியக் கொடி கேட்டாலோ வழங்கப்படும் என்றார்.

    • சிவகாசியில் தேசியக் கொடிகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • பேப்பர் கொடி மற்றும் அட்டையால் தயாரிக்கப்படும் கொடிக–ளின் விலை கடந்த ஆண்டை விட சற்று கூடுதலாக இருக்கும்.

    சிவகாசி

    சுதந்திர தின கொண்டாட் டத்திற்கு இந்திய நாடே தயாராகி வருகிறது. சுதந்திர தின கொண்டாடத்தில் அனைவரின் நெஞ்சங்களி–லும் தவறாமல் இடம் பிடிப் பது மூவர்ண தேசிய கொடி என்றால் அது மிகையல்ல. விருதுநகர் மாவட்டம் சிவ–காசியில் உள்ள அச்சகத்தில், சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தேவையான தேசிய கொடிகள் அச்சடிக் கும் பணிகளும், தயாரான கொடிகள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிக–ளும் விறுவிறுப்பாக நடை–பெற்று வருகிறது.

    சிவகாசி அச்சகத்தில் துணியிலான தேசிய கொடி–கள், வார்னிஷ் பேப்பர், பளபளக்கும் ஆர்ட் பேப்பர், அட்டை உள்ளிட்டவைகளில் தயாராகி வருகின்றன. சட் டையில் குத்தும் வகையில் பேப்பர் தேசிய கொடிகளும், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் முகப்புக–ளில் பொருத்தும் வகையி–லான அட்டையால் தயாரிக் கப்படும் தேசிய கொடிகள் அதிகளவில் தயாராகி வரு–கின்றன. மேலும் இந்தியா வரை படத்துடன் கூடிய தேசிய கொடிகள், தேசத்தந்தை மகாத்மா காந்தி உருவத்து–டன் கூடிய தேசிய கொடி–கள், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால்நேரு உருவத்து–டன் கூடிய தேசிய கொடிகள் அழகிய வடிவங்களுடன், கண்ணை கவரும் டைகட்டிங் வடிவத்துடன் தயாரிக்கப் பட்டு வருகின்றன. மேலும், தொப்பி வடிவில் தலையில் மாட்டிக்கொள்ளும் வகை–யில் தேசியக் கொடிகள், கைகளில் மாட்டிக் கொள் ளும் வகையிலான தேசிய கொடிகளும் தயாரிக்கப்பட் டுள்ளன.

    தேசிய கொடிகள் தயா–ரிப்பில் முன்னணியில் இருக்கும் அச்சக உரிமையா–ளர் கூறும்போது, எங்களது அச்சகத்தில் பல்வேறு வகை–களிலான அச்சு பணிகள் நடந்து வருகின்றன. சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய கொடிகள் தயாரிக் கும் பணிகளையும் செய்து வருகிறோம். ஆரம்பத்தில் தமிழகத்தில் உள்ள பிரப–லமான பள்ளிகள், கல்லூரி–களில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கா க தேசிய கொடிகளை மொத்தமாக ஆர்டர்கள் கொடுத்து வாங்கினார்கள். பொதுமக்கள் பயன்ப–டுத்துவதற்காக ஸ்டேசனரி கடைகளில் பல வடிவங்க–ளிலான தேசிய கொடிகள் விற்பனைக்கு வந்துள்ளது. படிப்படியாக தமிழகம் முழு–வதும் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை சட்டைக–ளில் குத்திக் கொள்ளும் உற்சாகம் தொடங்கியது. இது தமிழகத்தை தாண்டி புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் பரவியது. அங்குள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் கடை–களில் விற்பனை செய்வ–தற்கான தேசிய கொடிகள் ஆர்டர்கள் அதிகளவில் கிடைத்தது.

    ஒரு முறை எங்களது நிறுவனத்தில் தேசிய கொடி–கள் வாங்குபவர்கள் பின்னர் தொடர்ந்து ஒவ் வொரு ஆண்டும் ஆர்டர்கள் கொடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு நாடு தயாராகி வரும் நிலையில், தேசிய கொடிக்கான ஆர்டர்களும் எதிர்பார்த்த அளவில் சிறப்பாக உள்ளது. பேப்பர் கொடி மற்றும் அட்டையால் தயாரிக்கப்படும் கொடிக–ளின் விலை கடந்த ஆண்டை விட சற்று கூடுதலாக இருக்கும். ஆனால் இந்த சின்ன விலையேற்றம் பெரிய பாதிப்பை ஏற்படுத்த–வில்லை. கடந்த இரண்டு மாதங்களாக தேசிய கொடி–கள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது எடுக்கப்பட்ட ஆர்டர்களுக்கு கொடிகள் அனுப்பி வைக்கும் பணிகள் நடந்து வரு–கின்றன என்றார்.

    • திருப்பூரில் உள்ள கொடி உற்பத்தியாளர்களிடம் தேசிய கொடிகள் தயாரிப்பதற்கான ஆர்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
    • தமிழகத்தை பொறுத்தவரை கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 8 நிறுவனங்கள் மட்டுமே கொடிகள் தயாரிக்கின்றன.

    திருப்பூர்:

    நாட்டின் 75வது சுதந்திர தினம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஆகஸ்டு 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தேசியக்கொடியேற்றி நாட்டு மக்களின் இணைப்பை மேலும் வலுவாக்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தேசிய கொடிகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக திருப்பூரில் உள்ள கொடி உற்பத்தியாளர்களிடம் தேசிய கொடிகள் தயாரிப்பதற்கான ஆர்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த கொடி உற்பத்தியாளர்கள் கூறுகையில், தற்போது, 75வது ஆண்டு சுதந்திர தினம் என்பதாலும் அரசு சார்பில் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற அனுமதியும், வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு தேசிய கொடி தயாரிப்புக்கான ஆர்டர்கள் அதிகம் பெறப்பட்டுள்ளது.

    தமிழகத்தை பொறுத்தவரை கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 8 நிறுவனங்கள் மட்டுமே கொடிகள் தயாரிக்கின்றன. வட மாநிலங்களில் இருந்து காகிதம் மற்றும் பாலியஸ்டர் துணி கொடிகள் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. இருப்பினும் காட்டன் துணி கொடிகள் உற்பத்தி திருப்பூர்-கோவையில் மட்டுமே தயாராகிறது.

    தற்போதைய விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் 15 சதவீதம் வரை தேசிய கொடியின் விலை உயர்ந்துள்ளது. இதுவரை ஏறத்தாழ 10 லட்சம் ஆர்டர்கள் வரப்பெற்று திருப்பூர், கோவை நிறுவனங்களில் உற்பத்தி மும்முரமாக நடக்கிறது என்றனர்.

    ×